இன்பமும் துன்பமும் சேர்ந்ததுதான் உலகம்,
சொந்தமும் பந்தமும் இருப்பதுதான் வாழ்க்கை
தமிழால் கதைபேசி மகிழவும்,
தலைமுறைகள் தலை தூக்கி வாழவும்,
என்றும் தேவை சொந்தமும் பந்தமும் ,
கோடி தெய்வங்கள் இருந்தாலும்
காக்கும் தெய்வத்திற்கு இணையில்லை,
ஒருபானை பொங்கலுக்கு அடைந்திடும்
ஆனந்தத்துக்கு அளவேயில்லை
உறவுக்குள்ளே எத்தனையோ முரண்பாடு இருந்தாலும் ,
அவையில்லா வாழ்க்கை மூலாம்பூசிய பொருள்களாகும்.





