4 February 2018

என்மீது கோபமா ..........


என்மீது கோபமா

வான்நிலா தேய்ந்து 
வளர்வதை போல், 
என்நினைவுகள் மலர்கின்றதடா, 
வளர்ந்தபின் தேயும் 
என்பதை அறிவேன், 
வளர்வதும் தேய்வதும் 
காதலின் இயல்புதானடா, 
என்மீது கோபம் 
குறையவில்லையா, 
ஊடல் கொள்வது கூடலுக்கு தானடா, 
உன்வருகைகாக 
பூத்திருக்கும் ஆம்பல் நான், 
விரைவில் வந்து உன் மதிமுகம் காட்டடா, 
             என் காதலா........................

No comments:

Post a Comment