3 February 2018

நான் ஒர் பட்டதாரி இளைஞன் .....


பல கனவுகளுடன், 
பள்ளி முடித்து, 
பொறியியல் படித்தேன், 
வாய்ப்புகளை தேடி சென்றேன், 
வாயிற்காவலரிடம் பேசிவிட்டுதான் வந்தேன், 
பதிரெண்டு மணிநேர வேலை, 
படிக்காதவரின் மேற்பார்வையில், 
பாதிகூட இல்லை வாயிற்காவலர் சம்பளத்தில், 
படுத்தவுடன் உறங்குகிறேன், 
பாதியில் எழுந்தால் அழுகிறேன், 
வயிறு நிறைய சாப்பிட்டதில்லை, 
வாய் ருசிக்கு தேடியதில்லை

கதிரவன் வருமுன் செல்கிறேன், 
கனவில் மட்டுமே கரையை காண்கிறேன், 

ஒருபோதும் தளரவில்லை, 
ஒருநாள் விடியும் என்ற நம்பிக்கையில், 
என் பயணம் ...........

No comments:

Post a Comment