27 February 2018

கொஞ்சம் நிள்ளு புள்ள



நாட்டுப்புற காதல்  கவிதை




ஒத்தயடி பாதையில
தண்ணிக் குடம் சுமந்து போரவளே,
ஒத்தாசிக்கு நானும் வரவா,

உன் நடைய பார்த்து
கண்ணுரண்டும் இமைக்க மறுக்குது,
உன் இடைய பார்த்து
குடத்துநீரை போல மனசு குதிக்குது,

அங்கிட்டு இங்கிட்டு ஏன்டி
என்னை அலைய வைக்குற,
துறட்டி போல விழிய வைச்சு
என் மனசை இழுத்துட,

அத்தை பார்த்த, மாமா கேட்ட
நான் சொல்லிகிறேன்,
கொஞ்சம் நிள்ளு புள்ள,

தாவணியா நலுவமா பார்த்துகிற,
தாலிகட்ட போற மாமனை
பார்த்த ஏன்டி பூமியை நோக்குற,
ஏசபோச்சு வருமுன பயப்புடுற,
யாரயிருந்தாலும் நான் பார்த்துகிறேன்,
கொஞ்சம் நிள்ளு புள்ள.

No comments:

Post a Comment