4 March 2018

நிலவொளி

என் வாழ்வில் விடியலாய் வந்தாய்,
எந்தன் பயணத்தில் உயிராய் கலந்தாய்,
ஏன் பெண்ணே மேற்கில் மறைந்தாய்,
நீயில்லா வாழ்வு உயிரில்லா உடலானதே,


நீந்தி கடக்க கடல்முன் துணிந்தேன்,
நிலவொளியாய் வந்து தடுத்தாய்,
உன் இதயத்தை பார் என்றாய்,

உயிரில் உயிர் கலந்து ஒர் உயிராய்
இருப்பதை அவர்கள் உணரவில்லை,
நீயுமாய் என்றாய்,

வெறும் உடலை பிரித்து என்ன
செய்வார்கள் என்று  சொன்னாய்,
பிரிவு  காதலில் இன்பம்தான் என்றாய்,

பரிவு என்னும் பரிதி மறைவதில்லை,
காதல் என்றும் உலகில் அழிவதில்லை.,

No comments:

Post a Comment