26 February 2018

அதிகாலை காற்றே நில்லு


 நாட்டுப்புற கவிதை




அதிகாலை காற்றே நில்லு,
அருமை மனைவிக்கிட்ட
சேதி ஒன்னு சொல்லனும்,
ஒன்பது வீட்டைத்தாண்டி பத்தாவது வீடு,
ஒலையால் மேய்ந்த வீடு,
கொஞ்சம் என்னனு கேட்டுகிட்டு போ,


அதிகாலை காற்றே நில்லு,
வைகறை முடியப் போது
வயற்காட்டுல நிற்கிறேன்,
நீராகரம் கொண்டு வர சொல்லு,
சீக்கிரம் போயி வர சொல்லு,

வரும் போது
கழனியில களையெடுக்க களைகொட்டு
கொண்டு வர சொல்லு,
காளை மாட்டையும் சேர்த்து
கொண்டு வர சொல்லு,

குயில் பாட்டை கேட்டுகிட்டே போயி சொல்லு
வாசலிலே கோலத்தை பார்த்துடு போயி சொல்லு,
முந்தனைகாரியை முடிஞ்ச சீக்கிரம் வர சொல்லு,

2 comments:

  1. அருமை நண்பரே. ..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நட்பே...

      Delete