5 April 2018

வழிமீது விழிவைத்து

கன்னி உன்னை கண்டபின்னே,
கண்ணிரண்டும் தூங்கவில்லை,
இதயத்தையும் காணவில்லை,
உன்னை தேடி வந்திருக்கும்,
தன்னிடத்தை தேடி வந்திருக்கும்,

பெண்ணே!
உன்திமிரை அதனிடம் காட்டதே,
அனுமதி தரவில்லையெனில்,
உன்னிதயமும் உனக்கெதிராக
போர்கொடி தூக்கிவிடும்,
உள்ளே செல்லவிடு,
உன்னிதயத்திற்கு விடைகொடு,

நம்கண்ணிரெண்டும்
கனவு உலகத்திற்கு போகவேண்டும்,
நம்காதல் காவியமெழுத
கம்பன் பேனாவை எடுக்கவேண்டும்,

நீ வரும்
வழிமீது விழிவைத்து காத்திருக்கேன்,
வழக்கம் போல் புன்னகை வேண்டாமடி,
உன்னியதயம் மட்டும் தந்தால் போதுமடி ........

2 comments: