5 April 2018

வழிமீது விழிவைத்து

கன்னி உன்னை கண்டபின்னே,
கண்ணிரண்டும் தூங்கவில்லை,
இதயத்தையும் காணவில்லை,
உன்னை தேடி வந்திருக்கும்,
தன்னிடத்தை தேடி வந்திருக்கும்,

பெண்ணே!
உன்திமிரை அதனிடம் காட்டதே,
அனுமதி தரவில்லையெனில்,
உன்னிதயமும் உனக்கெதிராக
போர்கொடி தூக்கிவிடும்,
உள்ளே செல்லவிடு,
உன்னிதயத்திற்கு விடைகொடு,

நம்கண்ணிரெண்டும்
கனவு உலகத்திற்கு போகவேண்டும்,
நம்காதல் காவியமெழுத
கம்பன் பேனாவை எடுக்கவேண்டும்,

நீ வரும்
வழிமீது விழிவைத்து காத்திருக்கேன்,
வழக்கம் போல் புன்னகை வேண்டாமடி,
உன்னியதயம் மட்டும் தந்தால் போதுமடி ........

4 April 2018

வெற்றி கோட்டை


உன்னால் முடியாதென்று நீயே நினைத்து
மூலையிலே முடங்கி கிடக்கதே,
தோல்விகளை  கண்டு துவண்டு போகதே,

உறங்கும் விதை விழிக்கும்வரை
உறையிட்ட வெற்று பொருள்தான்,
உறங்கும் மனிதா நீயும் அப்படிதான்,

உனக்குள் உறங்கிக் கொண்டிருக்கும்
உன்னை நீயே எழுப்பி,
உலகத்தை உறுதியோடு பாருடா,

வானம் ஒன்று வாழ்க்கையும் ஒன்று
இதில் யாருக்கும் வேறுபாடில்லை,
ஒர்சாண் வயிற்க்கு மேலே
ஏதுவும் நிரம்புவதில்லை,

தன்னம்பிக்கையை வளர்த்திடு,
தடைகளை உடைத்திடு,
தோல்விகளை படிகட்டாக்கி
வெற்றி கோட்டையை வென்றிடு,

2 April 2018

கண்ணீர் பரிசு



கவலையில்லா வண்ணபூக்கள்

காலில் மீதிபட்டு அழிவது ஏனோ,

சிறு எறும்புக்கும் தீங்கு செய்யாத

சிறார்கள் சிதைவது ஏனோ,


விதிக்கு வந்து நாய்கள் அலைகின்றன,

வேட்டைகாரன் துங்கிவிட்டனோ -இல்லை

பிணத்தை சாப்பிட்டு சலித்துவிட்டதோ,


எத்தனை தெய்வங்களும் இருந்தும்

இவர்களை காக்க யாருமில்லையா,


வண்டு கூட தீண்டாது மலராத மொட்டுகளை,

நண்டு போல் காத்திருந்து கயமை செய்வது ஏனடா,


கள்ளம் கபடமற்ற கடவுளின் பிம்பங்களுக்கு

கண்ணீர் பரிசுகளை தருவதா ,

விண்னை வெல்லவும் நம்பிக்கை தருவோம்,


இனியவது ஒன்றுபடுவோம்,

ஒழுக்கத்தை போதிப்போம்........