8 February 2018

அன்பே கடவுள்


அன்பே கடவுளடா  
ஆத்திகம் என்பதும், நாத்திகம் என்பதும், 
அவரவர் பார்வையிலடா,

ஏகன் என்பதும், அனேகன் என்பதும் , 
கடவுளின் பிம்பமடா

பிணத்தை மிதித்து 
கடவுளை காண்பதா!!! 
என்ன புண்ணிய கணக்குடா,

கீழே உள்ளவரை 
மேலே உயர்த்தினால் 
நீயும் கடவுளடா,  

அண்ணைய துறந்து, 
திண்ணையை வணங்குவது 
என்ன அர்த்தமடா,

அரசமரத்தை வெட்டி , 
ஆயிரம் முறை சுற்றுவது 
என்ன நம்பிக்கையில்டா, 

குழந்தை பேச்சில் கரையாதவன் 
கடவுளை காண ஒடுவா, 
குழந்தை முகத்தில் கடவுளைகாண்பவன் 
கடமையாற்றும் வழி செல்வான்.

அன்பே கடவுளடா  ...........



............................      ... .........      . ......... செநா 


No comments:

Post a Comment