23 February 2018

கலைஞன்



 நாட்டுப்புற கவிதை






கண்ணீர் மறைத்து கவலைகள் விடுத்து,
கலைஞன் கலைக்காகவே வாழ்வை குடுப்பான்,

ஆடாத கால்களையும் ஆட வைப்பேன்,
ஆதி முதல் அந்தம் வரை
அவனும் தொடர்ந்து வருவான்,

உச்சி முதல் பாதம் வரை
ஒப்பனை செய்தே,
ஊரேங்கும் கலைகள் செய்வான்,

ஊனில் உயிர் உள்ளவரை
உலகத்துக்கு தான் உழப்பை தருவான்,

ஆனால்
காசுக்காக ஆடியவனை
தூக்கி உயர்த்தினோம் ,
கலைக்காக வாழ்ந்தவனை
தூக்கி எறிந்தோம்,

காளைகள் காக்க ஒன்று கூடினோம்,
கலைஞனை ஏனோ காக்க மறந்தோம்,
இனியவது ஓர் வழி செய்வோம்,
இவர்களை காக்க ஒன்றுபடுவோம் ......

2 comments: