19 February 2018

தாயுமானவளே


அன்பு கவிதை 







எத்தனை கோடி தவங்கள் செய்தேனோ,
எந்தன் வாழ்வில் வரமாய் வந்தாயே,

என்னை சிறுகுழந்தையாக்கி – பசுமை
நினைவுகளை பரிசாய் தந்தாயே,

முத்தம் ஒன்றை தந்து – என்
மொத்த கவலைகளையும் வென்றாயே,

சிறுபுன்னகை கொண்டு – என்
பெரு வலிகளையும் கொன்றாயே ,

என்னை காக்கவே - தாயே
பூமிக்கு மீண்டும் வந்தயோ,
உன்னை தோளில் சுமப்பதற்கு
புண்ணியம் என்ன செய்தேனோ,

இருகண்களுடன் உலகை ரசிப்பதற்கே- என்
திருமதியுடன் உன்னை கொடுத்தனோ,

தேவதைக்கு தேவதையாக பிறந்தயே,
என் தாயுமானவளே.............

2 comments:

  1. தேவைதைக்கு தேவதையாக

    அருமையான வரிகள் நண்பரே...!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகையால் மனம் மகிழ்ந்தேன்..
      கருத்திற்கும் நன்றி சகோதரா....

      Delete