1 February 2018

பெருமை .........



அன்னையே! 
அம்போருகம் போல், 
அல்லல் என்னை தீண்டமால், 
அமுது அள்ளி கொடுத்து, அரைவயிறு நீ நனைத்து, 
அல்லும் பகலும் வளர்த்தவளே!, 
அருகில் இருக்கும் வரை, 
அருமை தெரியவில்லை, 
அறிந்தபின் அடக்கமுடியவில்லை அழுகையை , 
ஏக்கங்கள் எரிமலையாக சிதறுகின்றன , 
சுடரொளியாக உன்னை காண்கின்ற போது ,, 

உன் 
பாதியின் அரவணைப்பில், 
பக்குவம் அடைந்தேன், 
படைப்பின் சுழற்சியை உணர்ந்தேன் , 
இல்லாமையை மறந்தேன், 

இருப்பினும் சில நேரங்களில், 
சிரிக்கின்றேன் வலிகளை மறைத்து, 
சிரிக்கவைக்கின்றேன் வலியின் வலிமையறிந்து, 
எரிமலையை 
எள்ளளவு விதையாக்கி, 
பரந்து விரிந்த மரம் வளர்த்து, 
பறந்து திரியும் பறவைகளுக்கு வீடக்குவேன், 
என்னை சுமந்த உன் பெருமைக்கா மட்டுமில்லை, 
என்னையும் சேர்த்து சுமந்தவர்க்காவும்..........

No comments:

Post a Comment