17 January 2018

அன்னை..

உயிர்வலி கொண்டாலும்
உலகம் காண உயிர் தருவாள்;
உயர் என்றும் உன்னதம் என்றும் உயர்த்தி பார்ப்பாள்;
ஊண் மறந்து உறக்கம் மறந்து
ஊட்டி வளர்ப்பாள்,,,,,

அறம் சொல்லி தரம் உயர்த்துவாள்;
அன்பு கொண்டு நெறிப்படுத்துவாள்;
ஆசை அறுத்து ஆயுள் கூட்டுவாள்,,

தரம் உயர்த்தும் தாரம் தேடுவாள் ;
தூரம் விலகினாலும் வாழ்க என வரம் கொடுப்பாள்;
சிரம் போகும் வரையிலும் கரம் தருவாள்..........

No comments:

Post a Comment