15 January 2018

நான் ஒர் பட்டதாரி இளைஞன்.........

கதிரவன் உதித்த நேரம் - சென்றேன்
கல்லூரி சாலை ஒரம்,

வழியெல்லாம் பூக்கள் - நினைவில்
வந்தது வசந்த கால நாட்கள்,,

சொந்தமில்லா பல உறவு,
சொந்தமாக வேண்டிய ஒர் உறவு,,

கானல்நீராய் ஆனது வாழ்க்கை;
கண்ணீராய் போனது நம்பிக்கை,,

போதும் இந்த துன்பம் என நினைத்தேன்;
பேருந்து நிலையம் செல்ல துடித்தேன்,,

திரும்பும் போது வயதான அன்னையின் சிறுகடை;
திரும்பிவிட்டேன் மீண்டும் சிறை நோக்கி நடை..............

No comments:

Post a Comment