7 February 2020

தாயுமானவள்

எத்தனை கோடி தவங்கள் செய்தேனோ,
எந்தன் வாழ்வில் வரமாய் வந்தாய் ,
என்னை சிறுகுழந்தையாக்கி – பசுமை
நினைவுகளை பரிசாய் தந்தாய் ,
முத்தம் ஒன்றை தந்து – என்
மொத்த கவலைகளையும் வென்றாய் ,
சிறுபுன்னகை கொண்டு – என்
பெரு வலிகளையும் கொன்றாய்  ,

தாயே எனக்காகவே 
மீண்டும் பூமிக்கு  வந்தயோ,
உன்னை தோளில் சுமப்பதற்கு
என்ன புண்ணியம்  செய்தேனோ,
இருகண்களுடன் உலகை ரசிப்பதற்கே- என்
திருமதியுடன் உன்னை கொடுத்தனோ,

தேவதைக்கு தேவதையாக பிறந்தளே ,
என் தாயுமானவளே.............

1 comment: