என்னை காதலிக்கவில்லை என்று தெரிந்தும்
என்னால் உன்னை மறக்கமுடியவில்லை,
என்னை ஏன் உனக்கு பிடிக்கவில்லை
என்று தெரியமால் தினம் துடிக்கின்றேன்,
உன்னை ஏன் எனக்கு பிடித்தது
என்று புரியாமல் தினம் தவிக்கின்றேன்,
எதுவும் புரியாமல் என்னுள் ஏராளமான கேள்விகள் எழுந்த போதும்
உன்னிதய ஒரத்திலாவது இடம் பிடிக்க முயல்கிறேன்,
உயிருள்ளவரை என்காதலை புரியவைக்க முயற்சிக்கிறேன்,
எதுவரை தொடருமோ இந்த காதல் பயணம்,
அதுவரை தொடரும் என்வாழ்வின் பயணம் ……

No comments:
Post a Comment