17 February 2018

நீயின்றி நானேது

காதல் கவிதை 






நீரின்றி உலகேது,
நீயின்றி நானேது,
நீயில்லா என்வாழ்வில் பொருள்யாது?
நித்தமும் உன்நினைவு என்னுள்ளே,
நிழலும் வரமறுக்கிறது என்பின்னே,

அன்பு மழை பொய்த்துவிட்டதா - ஏன்
கண்ணீரால் காப்பாற்ற முயல்கிறாய்
என்னிதயத்தை,
ஒர்துளி காணும் போதே இறந்துவிடும்
என்பதை மறந்துவிட்டயா,

இதயம் கணத்துவிட்டதா - ஏன்
இறக்கிவைத்துவிட்டாய் பெண்ணே?
இறந்துவிடும் என்று தெரிந்தும்
இரக்கமில்லையா ,

கண்ணில் தோன்றி கண்ணீரில் முடியும்
காட்சியோட்டமா என்காதல்?
கண்ணில் தோன்றி இதயத்தில் வாழும்
உயிரோட்டமே என்காதல்,

நீரில் வாழ்ந்த நம்மை
நிலத்தில் தூக்கி எறிந்தவர் யார் பெண்ணே?
கவலையில்லை எனக்கு
நம்காதல் மழையை கொண்டு
நம்மை சேர்க்கும் பெண்ணே........... 

2 comments:

  1. அருமையா இருக்குங்க கவிதை

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகையால் மனம் மகிழ்ந்தேன்..
      கருத்திற்கும் நன்றி சகோதரா....

      Delete