வாழ்க்கை கவிதை : நான் ஒர் பட்டதாரி இளைஞன்
சின்னஞ்சிறு பறவையாய்
சேட்டை செய்து வாழ்ந்தேன்,,
மேற்படிப்பில் நுழைந்தேன்,
வாழ்வை ரசித்தேன்,
புத்தகயறிவை புத்தில் வைத்தேன்,
ஆனால் ஏனோ உலகயறிவை கற்கமறந்தேன்,,
கூட்டைவிட்டு குருவிகளாய்
சேர்ந்து சென்றோம்,
உணர்வை உணர்ச்சியை அடக்கி
உறங்கும் நேரம் குறைத்து,
ஒயமால் உழைத்தேன்,
ஒருவருடம் கடந்தேன்,,
மறுநாளே வெளியில் செல்ல
நிர்வாகம் என்னை தள்ள
தடுமாறி போனேன்,,
நூலறுந்த பட்டமாகி
காற்றின் திசையில் பறந்தேன்
முள்ளில் சிக்கி சிதைந்தேன்,,
கண்களில் கண்ணீர் தெரியமால்
கண்ணுக்குள் கனவை உடைத்தேன்,
அந்திக்குள் திரும்பதா பறவை போல
நான் மாட்டிகொண்டேன் ,,
ஆனால்.....
இறக்கையில் வலுவிருக்கு,
இன்னும் நம்பிக்கையிருக்கு,
விடியும்வரை போரடுவேன்,
விழமால் நிலைத்திருப்பேன்......

No comments:
Post a Comment