நெடுந்தூரம் போனால் என்ன?
நொடிப்பொழுதும் உன்நினைவுகள்
என்னுள்ளே என்றும் மறையாதடி...
உண்மை காதலாயிருந்தும் ஏன் அது
ஊமை காதலாய் ஆனதடி...
தானாக தோன்றுவது தான் காதல் வேண்டி பெறுவதில்லை,
வேண்டாமடி உந்தன் அனுதாப காதல் பெண்ணே,,
மார்கழி மாதம் கோலமிடும் பெண்ணை காண
கடவுள் வருவதாக கதைகள் சொல்கிறது ...
தினமும் காணவரும் என்னை
என்னவென்று சொல்வாய் பெண்ணே....
அந்திக்குள் திரும்பும் பறவைகளுக்கு
கடிகாரம் இல்லை,
அதைப்போல தானே உன்மீது
காதல் கொள்ளக்காரணம் இல்லையடி.....

No comments:
Post a Comment